May 26, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒன்பது அனைத்துலக வழித்தடங்களுக்கு விமானச் சேவை
தற்போதைய செய்திகள்

மேலும் ஒன்பது அனைத்துலக வழித்தடங்களுக்கு விமானச் சேவை

Share:

கோலாலம்பூர், டிச.4-


மலேசியா மேலும் ஒன்பது அனைத்துலக வழித்தடங்களுக்கும், ஒரு சிறப்புச் சேவைக்கான வழித்தடத்திற்கும் புதிய விமானச் சேவைகளை அறிமுகப்படுத்தவிருப்பதாக சுற்றுலா, கலை,பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்துலக விமானச் சேவைகள் அனைத்தும் நாட்டின் தலைநகரான கோலாலம்பூர், ஜோகூர்பாரு, கோத்தா கினபாலு, லங்காவி மற்றும் பினாங்கு ஆகியவற்றுடன் இணைப்பை கொண்டு இருக்கும் என்று தியோங் கிங் சிங் குறிப்பிட்டார்.

இம்மாதம் மத்தியப்பகுதியில் இந்தியாவின் பிரதான விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஏர்லைன்ஸ், மலேசியாவையும், இந்தியாவையும் இணைக்கும் மூன்று புதிய வழித்தடங்களுக்கு தனது சேவையை தொடங்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

பெங்களூரிலிருந்து கோலாலம்பூர் மற்றும் லங்காவிற்கு தினசரி சேவையையும், சென்னைக்கும், பினாங்கிற்கும் இடையில் தினசரி சேவையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் மேற்கொள்ளவிருப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தியோங் கிங் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று பத்தேக் ஏர் விமான நிறுவனம், தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்கும், ஜோகூர்பாருவிற்கும் தினசரி சேவையை மேற்கொள்ளவிருக்கும் வேளையில் ஏர் ஆசியா,வியட்நாம் சைகோனிலிருந்து கோத்தா கினபாலுவிற்கு வாரத்திற்கு மூன்று விமானச் சேவைகளை மேற்கொள்ளவிருப்பதாக தியோங் கிங் சிங் விளக்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு