கோலாலம்பூர் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பேரங்காடி மையம் ஒன்று , தனது ஆண்டு விழாவையொட்டி மேற்காசிய கவர்ச்சி நடனமான பெல்லி நடன நிகழ்வை பொதுவில் நடத்தியதற்காக அந்த பேரங்காடி மையத்தை தற்காலிகாமக மூடுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. அரைகுறை ஆடையில் இளம் நங்கையர்களின் இடையாட்டம், சமுக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த பேரங்காடி மையம், தனது வர்த்தக அனுமதிக்கான நிபந்தனைகளை மீறிவிட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜுலை 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த பெல்லி நடன நிகழ்வு, அப்பகுதி மக்களை முகசுளிப்பில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


