Aug 10, 2026
Thisaigal NewsYouTube
புதிய ஆளுநர் வேட்பாளர் பெயர் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

புதிய ஆளுநர் வேட்பாளர் பெயர் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.19-

பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநர் பதவிக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியல் பரிசீலனைக்காக பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.

தற்போது பினாங்கு ஆளுநராக பதவி வகித்து வரும் துன் அஹ்மாட் புஃஸி அப்துல் ரசாக் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால் புதிய ஆளுநர் பதவிக்கு சிலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

பினாங்கு ஆளுநர் பதவி என்பது மாமன்னரால் நியமிக்கப்படக்கூடியதாகும். அப்பதவிக்கு நியமிக்கப்படக்கூடியவர் நான்கு ஆண்டுகள் உள்ளடக்கிய ஒரு தவணைக் காலம் அப்பொறுப்பில் இருப்பார்.

ஆளுநர் பதவிக்கு யாரைத் தேர்வு செய்வது என்பது மாமன்னரின் விவேகத்திற்கு உட்பட்டதாகும். நடப்பில் உள்ளவரின் பதவிக் காலம் நீடிக்கப்படவில்லை என்றால் புதிய நியமனம் அவசியமாகிறது. அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்று சோவ் கோன் யோவ் விளக்கினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து