மலேசியாவின் சூரிய மின்சக்தித் திட்டங்களில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த, பேட்டரி ஆற்றல் சேமிப்பு முறையான பெஸ் கட்டாயமாக்கப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபதிலா யூசுப் அறிவித்துள்ளார்.
கோலாலம்பூர் கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்வில், மலேசியாவின் மைக்ரோ எம்எஸ்சி நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த ஹாங்காங்கின் காஸ்பவர் டெக்னாலஜி நிறுவனத்துடன் பிரத்யேக கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய எரிசக்தி மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான ஃபடிலா யூசுப், நாட்டின் தேசிய எரிசக்தி மாற்றுத் திட்டத்திற்கு இத்தகைய பேட்டரி தொழில்நுட்பங்கள் மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மலேசியாவின் மின் விநியோகத்தை நிலைப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடையவும் இரு நிறுவனங்களும் இணைந்து பெரிய அளவிலான பேட்டரி சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளன.










