Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் பேட்டரி சேமிப்புத் திட்டம் கட்டாயம்: துணைப் பிரதமர் ஃபடிலா யூசுப் முன்னிலையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் பேட்டரி சேமிப்புத் திட்டம் கட்டாயம்: துணைப் பிரதமர் ஃபடிலா யூசுப் முன்னிலையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து

Share:

மலேசியாவின் சூரிய மின்சக்தித் திட்டங்களில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த, பேட்டரி ஆற்றல் சேமிப்பு முறையான பெஸ் கட்டாயமாக்கப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபதிலா யூசுப் அறிவித்துள்ளார்.

கோலாலம்பூர் கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்வில், மலேசியாவின் மைக்ரோ எம்எஸ்சி நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த ஹாங்காங்கின் காஸ்பவர் டெக்னாலஜி நிறுவனத்துடன் பிரத்யேக கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய எரிசக்தி மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான ஃபடிலா யூசுப், நாட்டின் தேசிய எரிசக்தி மாற்றுத் திட்டத்திற்கு இத்தகைய பேட்டரி தொழில்நுட்பங்கள் மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மலேசியாவின் மின் விநியோகத்தை நிலைப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடையவும் இரு நிறுவனங்களும் இணைந்து பெரிய அளவிலான பேட்டரி சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளன.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்