Mar 23, 2026
Thisaigal NewsYouTube
2024 ஆம் ஆண்டு மித்ரா டயாலிசிஸ் உதவித்தொகைக்குவிண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

2024 ஆம் ஆண்டு மித்ரா டயாலிசிஸ் உதவித்தொகைக்குவிண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 25-

மலேசிய இந்தியர்களின் உருமாற்றுப்பிரிவான மித்ரா, 2024 ஆம் ஆண்டுக்கான டயாலிசிஸ் உதவித்தொகை திட்டத்திற்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மலேசிய சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட டயாலிசிஸ் மையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்ற இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறுநீரக நோயாளிகள் 2024 ஆம் ஆண்டுக்கான மித்ராவின் டயாலிசிஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மித்ரா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டயாலிசிஸ் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் ஜுன் 24 ஆம் தேதி திறக்கப்பட்டு, வரும் ஜுலை 23 ஆம் தேதி பிற்பகல் 2.00 மணியுடன் மூடப்படுகிறது. இந்த 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கும்படி மனுதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Google Form பாரத்தின் வாயிலாக அல்லாமலும், விண்ணப்ப காலக்கெடு மூடப்பட்டப்பின்னரும் அனுப்பப்படுகின்ற விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படாது. டயாலிசிஸ் உதவித்தொகைக்கான விண்ணப்ப வழிகாட்டலுக்கு கீழ் கண்ட அகப்பக்கத்தில் வலம் வரலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம்.

மித்ரா டையலிஸியஸ் உதவித் தொகை விண்ணப்பம்

https:Shorturl.at/WWVqb அல்லது அலுவலக நேரத்தில் 03-8886 6239/ 03-8886 6020 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related News