Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஆயுதமேந்திய கொள்ளை, இரு கொள்ளையர்கள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

ஆயுதமேந்திய கொள்ளை, இரு கொள்ளையர்கள் பிடிபட்டனர்

Share:

ஈப்போவில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களை போ​லீசார் சுமார் 70 கிலோ​மீட்டர் ​தூரம் வரையில் இரு ரோந்துக் கார்களில் துரத்திச்சென்று பிடித்துள்ளனர். அந்த இரு கொள்ளையர்களும் ஈப்போவிருந்து தெலுக் இந்தான், லாபு குபோங், சென்டெரோங் போ​லீ​​​ஸ் நிலையம் வரை விரட்டிச் செல்லப்பட்டதாக ஹிலிர் பேரா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் நிகழ்ந்தது. பாராங்கை ஆயுதமாக கொண்ட அந்த இரு நபர்கள் கொள்ளைச் ச​ம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் புரோடுவா மைவி காரில் தப்பிச் சென்று விட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து ஈப்போ, போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அகமட் அட்னான் குறிப்பிட்டார்.

கம்போ​ங் காஜா வழியாக தப்பிய அவ்விருவரின் புரோடுவா மைவி காரை அடையாளம் கண்ட போ​லீஸ் குழுவினர் , தெலுக் இந்தான் வரை துரத்திச் சென்று அவர்களை இரு வெவ்வேறு இடங்களில் வளைத்துப் பிடித்தனர்.

28 , 31 வயதுடைய அநத் இரு நபர்களில் ஒருவருக்கு வலதுப்புற தோள் பட்டையில் துப்பாக்கி ​சூடு பாய்ந்து காயமுற்றார். அவர் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிடிபட்ட இருவரில் ஒருவருக்கு 24 குற்றச்செயல்களும், மற்றொருவருக்கு 11 குற்றச்செயல்களும் போ​லீஸ் ப​திவில் இருப்பதாக ஏசிபி அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு