Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாருவில் காவல் துறைத் தலைவர் மீதான தாக்குதல் – அன்வார் கண்டனம்
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாருவில் காவல் துறைத் தலைவர் மீதான தாக்குதல் – அன்வார் கண்டனம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

தலைநகர் கம்போங் சுங்கை பாருவில் இன்று குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட வன்முறையில், டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் சுஸில்மி அஃபெண்டி சுலைமான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் உடனடியாக விசாரணையை மேற்கொண்டு, சுஸில்மி அஃபெண்டி மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

கம்போங் சுங்கை பாரு மறுவளர்ச்சித் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முன்மொழியப்பட்டு, பல்வேறு எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் எதிர்க்கொண்டு வந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள் பலர், இவ்வளர்ச்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், சில தரப்பினர் அதற்கு எதிர்ப்புகளும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை, காவல் துறையினரின் உதவியோடு குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து