Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சமூக சீர்கேடுகளுக்கு விவேக கைப்பேசியே முக்கியக் காரணமாகும்
தற்போதைய செய்திகள்

சமூக சீர்கேடுகளுக்கு விவேக கைப்பேசியே முக்கியக் காரணமாகும்

Share:

கோத்தா பாரு, ஏப்ரல்.11-

தகாத உறவு மற்றும் கற்பழிப்புச் சம்பவங்கள் போன்ற குற்றவியல் சம்பவங்கள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று விவேகக் கைப்பேசி மோகமாகும் என்று கிளந்தான் மாநில துணை முப்தி நிக் அப்துல் காடீர் நிக் முகமட் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சிறார்கள் தற்போது விவேகக் கைப்பேசியைக் கொண்டுள்ளனர். அதன் மோகத்தில் திளைத்திருக்கின்றனர்.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருக்கும் அவர்கள், தங்களுக்கு வேண்டிய குறிப்பாக தாங்கள் ஆர்வமிகுதியால் உந்தப்படுகின்ற உள்ளடக்கத்தை எளிதில் பெற்று விடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

தங்கள் தாய், தந்தைக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே விவேகக் கைப்பேசியில் ஆபாசப் படங்கள் மற்றும் இதர குற்றச் செயல்களைக் கண்டு களிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

அவ்வாறு பார்க்கக்கூடிய ஒழுங்கீன நடவடிக்கைகளை நேரடியாக காணும் வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் அதுவே அவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்குவதற்கு வழிகோள்கின்றன என்று அந்த துணை முப்தி தெரிவித்தார்.

கிளந்தான் மாநிலத்தில் 11 வயது சிறுவன், 15 வயது பெண்ணைக் கர்ப்பிணியாக்கியது மற்றும் கிளந்தானில் தகாத உறவு மற்றும் கற்பழிப்புச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக போலீஸ் துறை அறிவித்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் அந்த சமய அறிஞர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்