சிரம்பான், ஜாலான் டத்தோ ஷெய்க் அஹ்மாட்டில் உள்ள கேளிக்கை மையத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 2 துணை பப்ளிக் பிராசிகியூட்டர்களுடன் 15 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஓர் உயர் அதிகாரி உட்பட 15 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ செரி ஆயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட 15 போலீஸ்காரர்களில் 14 பேர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது சிறுநீர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீஸ்கார்களின் இது போன்ற முறைகேடாக செயல்களை போலீஸ் துறை ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெகிரி செம்பிலான் போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் புக்கிட் அமான் நேர்மை மற்றும் நன்னெறி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பிடிபட்ட இந்த 15 போலீஸ்காரர்கள், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
15 பேலிஸ்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை அறிக்கைகள் சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அயோக் கான் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


