May 6, 2026
Thisaigal NewsYouTube
கோல கங்சார் தொலைத்தொடர்பு கோபுரத் தீ விபத்து குறித்து விசாரணை – எம்சிஎம்சி தகவல்
தற்போதைய செய்திகள்

கோல கங்சார் தொலைத்தொடர்பு கோபுரத் தீ விபத்து குறித்து விசாரணை – எம்சிஎம்சி தகவல்

Share:

ஈப்போ, டிசம்பர்.29-

பேராக் மாநிலம், கோல கங்சார் பகுதியில் உள்ள கம்போங் கெலெபோர் கிராமத்தில் நேற்று மாலை நிகழ்ந்த, தொலைத்தொடர்பு கோபுரத் தீ விபத்திற்கான காரணம் குறித்து, தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் காரணமாக CelcomDigi, Maxis மற்றும் Unifi Mobile ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் பயனர்களுக்கு தற்காலிகமாகச் சேவை பாதிப்பு ஏற்பட்டதாகவும் எம்சிஎம்சி குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாலை 6.36 மணிக்கு நடந்த இச்சம்பவம் குறித்து, தகவல் கிடைத்த உடனேயே, கோல கங்சார் தீயணைப்பு நிலையத்திலிருந்து, மீட்புக் குழுவானது சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக, பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி இயக்குநர் ஷாஸ்லின் ஹனாஃபியா தெரிவித்தார்.

தீப்பற்றிய கோபுரமானது, வடக்கு–தெற்கு விரைவுச் சாலையிலிருந்து தெளிவாகக் காணப்பட்ட நிலையிலும் கூட, கொடுக்கப்பட்ட முகவரி துல்லியமாக இல்லாததால் சம்பவ இடத்தை அடைவதில் மீட்புக் குழுவினருக்குத் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தீ விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், சேவைகளை முழுமையாக மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்