கோலா பிலா,ஜன.9
அண்மையில் நெகிரி செம்பிலான், கோலா பிலா- வில் நகைக்கடை ஒன்றில் வாடிக்கையாளரைப் போல் பாவனை செய்து 41 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகளை களவாடிய மாது ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
தங்கச் சங்கிலிகள் களவாடப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட நகைக்கடையின் உரிமையாளரிடமிருந்து கடந்த ஜனவரி 3 ஆம் தேதி புகார் பெறப்பட்டுள்ளதாக கோலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் அமாரான் முஹமாட் கானி தெரிவித்தார்.
நகைகள் வாங்குவதைப் போல் சிறிது நேரம் பாவனை செய்து கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க மலாய்க்கார மாது, கண்ணாடி பேழையில் இருந்த இருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை கண் இமைக்கும் நேரத்தில் களவாடியது அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாக அமாரான் முஹமாட் கானி குறிப்பிட்டார்.








