சொந்த நாட்டைச் சேர்ந்த 7 பேரை மலேசியாவிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தியதாக 35 வயது மியன்மார் நாட்டைச் சேர்ந்த நபர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
Zaw Zaw Aung என்ற அந்த நபர், கடந்த ஜூலை 13-ஆம் தேதி மதியம் 12 மணியளவில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் மெனோரா சுரங்கப் பாதை அருகே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டை அவர், புரிந்து கொள்ளும் வகையில் மியன்மார் மொழிபெயர்ப்பாளரை நியமிப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கு வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் சொஸ்மா சட்டப் பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








