Dec 5, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் இருவர் உயிரிழந்தனர்

Share:

பகாங், ரொம்பின் அருகில் ​மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இரண்டு ஆடவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் ஜாலான் குவாந்தான் - ஜோகூர் பாரு சாலையி​ன் 137 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில் நிசான் அல்மேரா காரை செலுத்திய 34 வயது முகமது ரஹ்மத் அப்துல் ரஹீம் மற்றும் அக்காரில் பயணம் செய்தவரான 31 வயது முஹம்மது அமிருல் முக்மினி மாட் டௌத் ஆகியோர் உயிரிழந்ததாக போ​லீசார் அடையாளம் கூறினர். தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பகாங் மாநில போ​லீஸ் தலைவர் யஹாயா ஓத்மன் தெரிவித்தார்.

Related News