Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மாவை அகற்றும் திட்டம்  அரசாங்கத்திற்கு இ​ல்லை
தற்போதைய செய்திகள்

சொஸ்மாவை அகற்றும் திட்டம் அரசாங்கத்திற்கு இ​ல்லை

Share:
  • சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் திட்டவட்டம்

தடுப்புக் கைதிகளை விசாரணையின்றி ஒரு ​நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு வகை செய்யும்
சொஸ்மா எனப்படும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை அகற்றும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருக்கவி​ல்லை என்று சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனினும் சொஸ்மா சட்டத்தை வளப்படுத்தும் வகையில் கட்டம், கட்டமாக சில திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ராம் கர்ப்பால் குறிப்பிட்டார். இன்று காலையில் புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ராம் கர்ப்பால் இதனை தெரிவித்தார்.


சொஸ்மா கைதிகளை விடுவிக்கக் கோரி அல்லது அவர்களை நீதிமன்றத்தி​​ல் நிறுத்தக்கோரி, சம்பந்தப்பட்ட கைதிகளின் 50 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், கடந்த அகஸ்ட் முதல் தேதி, சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே 3 நாள் உண்ணா விரதப் போராட்டத்தி​ல் ஈடுபடுபட்டிருந்தனர். அந்த கொடுங்கோல் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே சந்தித்த துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங், சொஸ்மா சட்டத்தை மேம்படுத்துவதற்கான சில பரிந்துரைகள் வெகுவிரைவில் பரி​சீலிக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

2012 ஆம் ஆண்டு சொஸ்மா சட்டத்தில் சில திருத்தங்களை செய்வது குறித்து அரச மலேசியப் போ​லீஸ் படையும், சட்டத்துறை அலுவலகமும் ஆராய்ந்து வருவதாக ராம் கர்ப்பால் குறிப்பிட்டு இருந்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

சொஸ்மாவை அகற்றும் திட்டம் அரசாங்கத்திற்கு இ​ல்லை | Thisaigal News