Mar 18, 2026
Thisaigal NewsYouTube
யு மொபைல் நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம்
தற்போதைய செய்திகள்

யு மொபைல் நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம்

Share:

யு மொபைல் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 13-ஆம் தேதி முதல் அவரது பதவி நியமனமானது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யு மொபைல் நிறுவனத்தின் தோற்றுநர் வின்சென்ட் டான், கடந்த மார்ச் 12-ஆம் தேதி தலைவர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, துங்கு அமீனா புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வின்சென்ட் டான் இயக்குநர் வாரியத்தின் ஆலோசகராகப் பணியாற்றுவார் என்றும் யு மொபைல் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் டெலிமீடியா பிடிஇ எல்டிடி நிறுவனத்துடன் பங்கு விற்பனை ஒப்பந்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாவார் செத்தியா எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தின் பங்குகள் 50 விழுக்காட்டைக் கடந்துள்ள நிலையில், துங்கு அமீனா தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

டான் மற்றும் துங்கு அமீனா ஆகியோரால் நிறுவப்பட்ட முதலீட்டு நிறுவனமான 'மாவார் செத்தியா', தற்போது அத்தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கட்டுப்பாட்டுப் பங்கு வகிக்கிறது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த தனியார் நிறுவனங்களை வழிநடத்தியும், நிர்வாகக் குழுக்களில் இடம்பெற்றும், துங்கு அமீனா பரந்த அளவிலான தலைமைத்துவ மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்று 'யு மொபைல்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன