May 28, 2026
Thisaigal NewsYouTube
கிரிக்கெட் ஆட்டக்கார்கள் போர்வையில் நாட்டிற்குள் நுழைய முயற்சி - 15 வங்காளதேசிகள் கைது
தற்போதைய செய்திகள்

கிரிக்கெட் ஆட்டக்கார்கள் போர்வையில் நாட்டிற்குள் நுழைய முயற்சி - 15 வங்காளதேசிகள் கைது

Share:

செப்பாங், மார்ச்.18-

தாங்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்றும், மலேசியாவில் நடைபெறும் நட்புறவு ஆட்டத்தில் பங்கேற்க வந்திருந்திருப்பதாகவும் கூறி, நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த 15 வங்காளதேசப் பிரஜைகள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டனர்.

கிரிக்கெட் ஜெர்சியை அணிந்த நிலையில், குடிநுழைவு அதிகாரிகளின் கண்களை மறைக்க முயற்சி செய்த 15 வங்காளதேசிகளும், கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கான உடல்வாகு இல்லாததைக் கண்டு, குடிநுழைவு அதிகாரிகள் சந்தேகித்தனர்.

மார்ச் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் கிரிக்கெட் நட்புறவு ஆட்டத்தில் பங்கேற்பதற்காக மலேசியாவிற்கு வருவதற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வழங்கிய உறுதிக் கடிதத்தைச் சோதனையிட்ட போது, அது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த 15 பேரையும் கிரிக்கெட் விளையாட்டிற்காக அழைப்பு விடுத்துள்ள மலேசிய ஏற்பாட்டாளரை குடிநுழைவு அதிகாரிகள் விசாரணை செய்த போது, அவர் ஒரு தொழிற்சாலைக்கு ஆட்களை விநியோகிக்கும் ஏஜெண்டு என்பது தெரியவந்தது.
அந்த 15 வங்காளதேசப் பிரஜைகளும் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் அந்த ஏஜெண்டு குடிநுழைவுத்துறையின் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்