Mar 26, 2026
Thisaigal NewsYouTube
கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்
தற்போதைய செய்திகள்

கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்

Share:

கிள்ளான்,ஆகஸ்ட் 08-

வரும் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை கோலக் கிள்ளான் கடலோரப்பகுதியில் நீர் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்கும் படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கடலில் அலைகள் 4.8 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கிள்ளான் அரச மாநகர் மன்றம் கூறியது.
கோலக் கிள்ளான் நிலையத்தில் நாளை இரவு 8.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அலைகள் 4.6 மீட்டர் வரை உயரும் என மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதே வேளையில் பந்தர் கிளாங் மற்றும் செலாட் முரா நிலையங்களில் நீர் மட்டம் 3 மீட்டர் வரை உயர்ந்து அபாய அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வடிகால் மற்றும் நீர் பாசனத்துறையின் வெள்ளத் தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.
இந்த இயற்கைச் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி கடலோரங்களில் வசிக்கும் மக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். வானிலை நிலவரங்களை அவர்கள் அணுக்கமாக கவனித்து வரும் அதேவேளையில் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசு நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது