கோலாலம்பூர், ஜன - 10
பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது.
இன்று காலை 6 மணி வரையில் 1,525 பேர் வெள்ளத்தால் பாதிப்படைந்து இருப்பதாகவும் இந்த எண்ணிக்கை நேற்று ஒப்பீடுகையில் அதிகமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் 23 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகாம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
வெள்ளப்பெருக்கினால் 45 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதுடன் நிலச்சரிவு, பாலங்கள் சேதமடைந்திருப்பதாலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாக கூறப்படுகிறது.








