போலிடெக்னிக் மற்றும் கோலேஜ் கொமுனித்தி ஆகிய தொழிற்நுட்பக் கல்லூரிகளில் 2023/2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த சமூக கல்லூரிகள் இலாகா தெரிவித்துள்ளது. புதிய மாணவர் சேர்ப்பு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கியுள்ளது. மாணவர்களின் அதிகரிப்பு வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் பதிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது என்று உயர் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அந்த இலாகா குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் 26, 539 மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 22 ஆயிரத்து 634 ஆக இருந்தது என்று அந்த இலாகா சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


