போலிடெக்னிக் மற்றும் கோலேஜ் கொமுனித்தி ஆகிய தொழிற்நுட்பக் கல்லூரிகளில் 2023/2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த சமூக கல்லூரிகள் இலாகா தெரிவித்துள்ளது. புதிய மாணவர் சேர்ப்பு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கியுள்ளது. மாணவர்களின் அதிகரிப்பு வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் பதிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது என்று உயர் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அந்த இலாகா குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் 26, 539 மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 22 ஆயிரத்து 634 ஆக இருந்தது என்று அந்த இலாகா சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


