Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வடக்கு – தெற்கு விரைவுச் சாலையில் 3 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

வடக்கு – தெற்கு விரைவுச் சாலையில் 3 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம்

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்.29-

பிறை அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் கிலோமீட்டர் 140.8 -ல் மூன்று வாகனங்கள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது யமஹா 135 LC மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த 28 வயதான இளைஞர் முஹம்மது சயாஹிம் ரஸ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே வேளையில், அவ்விடத்தில் டிரெய்லர் லோரி மோதிய விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்தார்.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இன்று மதியம் 12.43 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, உடனடியாக ஒரு குழுவைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்புப் பணிகள் நடைபெற்றன.

Related News