Mar 26, 2026
Thisaigal NewsYouTube
அந்நியநாட்டைச் சேர்ந்த பிரஜைகளுக்கு அதிகாரிகளின் முறையான சோதனைக்கு உட்படாமல் நாட்டிற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி முறியடித்துள்ளது
தற்போதைய செய்திகள்

அந்நியநாட்டைச் சேர்ந்த பிரஜைகளுக்கு அதிகாரிகளின் முறையான சோதனைக்கு உட்படாமல் நாட்டிற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி முறியடித்துள்ளது

Share:

கிள்ளான் , ஆகஸ்ட் 21-


கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு மற்றும் கிளந்தானில் மேற்கொள்ளப்பட்ட ‘ஓப்ஸ் பம்ப்‘ சோதனை நடவடிக்கையின் வாயிலாக 20 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட மொத்தம் 12 பேரைக் கைது செய்ததன் வழி இக்கும்பலின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டதாக எம்.ஏ.சி.சி தலைமை. ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.


கைது செய்யப்பட்டவர்களில் நான்கு நிறுவன உரிமையாளர்கள், வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பொது மக்கள் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் பணிபுரிந்து வரும் ஐந்து அமலாக்க அதிகாரிகளும் அடங்குவர் என அவர் தெரிவித்தார்.


இந்த சட்டவிரோத நடவடிக்கையின் வாயிலாக அக்கும்பல் பெரும் தொகையை லாபமாக ஈட்டியுள்ளதாக நம்பப்படுகிறது. கடந்த 2022 முதல் 20214 வரையிலான காலக்கட்டத்தில் 40 லட்சம் வெள்ளி மதிப்பில் பணப்புழக்கம் நடைபெற்றுள்ளதாகவும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதற்காக இப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரு பகுதி அமலாக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்!.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு