May 20, 2026
Thisaigal NewsYouTube
மலாய் பிரகடனம்  ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டது
தற்போதைய செய்திகள்

மலாய் பிரகடனம் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டது

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள மலாய் பிரகடனம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டதாக பார்க்கப்படுகிறது என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி தெரிவித்துள்ளார்.

மலாய் பிரகடனம், ஒற்றுமை அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்காகவும் , கவிழ்ப்பதற்காகவும் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் நோக்கத்தை கொண்டதே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

அன்வார், நாட்டின் பிரதமரானதை மகாதீரால் ஜீரணிக்க முடியாமல், மனதிற்குள் புளுங்கிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான் நடப்பு உண்மையாகும் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

ஓரங்கங்கப்பட்ட மலாய்க்காரரர்களைக் காப்பாற்றுவதற்காக மலாய் பிரகடனம் தொடங்கப்பட்டுள்ளது என்று மகாதீர் கூறுகிறார். ஆனால், மலாய் பிரகடனத்தை மிக ஆழமாக ஆராய்ந்துப் பார்த்தால் அது மலாய்க்காரர்களைக் காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்டுள்ள பிரகடனம் அல்ல. மாறாக, அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான பின்னணியைக் கொண்டதாகும் என்று டாக்டர் இராமசாமி விளக்கினார்.

அடக்குமுறை மற்றும் அநீதியிலிருந்து மலாய்க்காரர்களைக் காப்பாற்றுவதற்குத் தன்னால் மட்டுமே முடியும் என்று துன் மகாதீர் மனப்பால் குடித்து வருவதாக டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு