Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மலாய் பிரகடனம்  ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டது
தற்போதைய செய்திகள்

மலாய் பிரகடனம் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டது

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள மலாய் பிரகடனம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டதாக பார்க்கப்படுகிறது என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி தெரிவித்துள்ளார்.

மலாய் பிரகடனம், ஒற்றுமை அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்காகவும் , கவிழ்ப்பதற்காகவும் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் நோக்கத்தை கொண்டதே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

அன்வார், நாட்டின் பிரதமரானதை மகாதீரால் ஜீரணிக்க முடியாமல், மனதிற்குள் புளுங்கிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான் நடப்பு உண்மையாகும் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

ஓரங்கங்கப்பட்ட மலாய்க்காரரர்களைக் காப்பாற்றுவதற்காக மலாய் பிரகடனம் தொடங்கப்பட்டுள்ளது என்று மகாதீர் கூறுகிறார். ஆனால், மலாய் பிரகடனத்தை மிக ஆழமாக ஆராய்ந்துப் பார்த்தால் அது மலாய்க்காரர்களைக் காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்டுள்ள பிரகடனம் அல்ல. மாறாக, அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான பின்னணியைக் கொண்டதாகும் என்று டாக்டர் இராமசாமி விளக்கினார்.

அடக்குமுறை மற்றும் அநீதியிலிருந்து மலாய்க்காரர்களைக் காப்பாற்றுவதற்குத் தன்னால் மட்டுமே முடியும் என்று துன் மகாதீர் மனப்பால் குடித்து வருவதாக டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு