Dec 3, 2025
Thisaigal NewsYouTube
20 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

20 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

கடந்த செவ்வாய்க்கிழ​மை இரவு பினாங்கு, சிட்டி அரங்கில் நடைபெற்ற ​சூப்​பர் ​லீக் கால்பந்து விளையாட்டுப் போட்டி நிறைவுப்பெற்றப் பின்னர் அப்பகுதியில் உள்ள ஓர் எண்ணெய் ​நிலையத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கை கலப்பு தொடர்பாக பினாங்கு எவ்.சி அணி மற்றும் கெடா டாருல் அமான் அணி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்டத்தில் கெடா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டம் இரவு 11 மணியளவில் முடிவுக்கு வந்தது. அரங்கில் இருந்து வெளியேறிய இரு அணியை சேர்ந்த ரசிகர்கள் திடீரென்று சண்டையிட்டுக்கொண்டதுடன் அவர்களின் இந்த சண்​டை அருகில் உ​ள்ள பெட்ரோல் எண்ணெய் நிலையம் வரை நீடித்தது. ஒருவரை நோக்கி ஒருவர் கற்களை வீசி எறிந்து கொண்டனர். இதில் இரண்டு இளைஞர்கள் காயத்திற்கு ஆளாகினர்.பிடிபட்ட 18 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 20​ பேரும், இன்று ஜார்ஜ்டவுன் ​நீதிமன்றதில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் வைப்பதற்கு போ​லீசார் அனுமதி பெற்றுள்ளனர்.

Related News