கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பினாங்கு, சிட்டி அரங்கில் நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்து விளையாட்டுப் போட்டி நிறைவுப்பெற்றப் பின்னர் அப்பகுதியில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கை கலப்பு தொடர்பாக பினாங்கு எவ்.சி அணி மற்றும் கெடா டாருல் அமான் அணி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்டத்தில் கெடா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டம் இரவு 11 மணியளவில் முடிவுக்கு வந்தது. அரங்கில் இருந்து வெளியேறிய இரு அணியை சேர்ந்த ரசிகர்கள் திடீரென்று சண்டையிட்டுக்கொண்டதுடன் அவர்களின் இந்த சண்டை அருகில் உள்ள பெட்ரோல் எண்ணெய் நிலையம் வரை நீடித்தது. ஒருவரை நோக்கி ஒருவர் கற்களை வீசி எறிந்து கொண்டனர். இதில் இரண்டு இளைஞர்கள் காயத்திற்கு ஆளாகினர்.பிடிபட்ட 18 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 20 பேரும், இன்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றதில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் வைப்பதற்கு போலீசார் அனுமதி பெற்றுள்ளனர்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


