Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாடகி மானபங்கம், ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பாடகி மானபங்கம், ஆடவர் கைது

Share:

நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள டதாரான் நீலாய் சதுக்கத்தில் நேற்று .இரவு நடைபெற்ற மாபெரும் கலை விழாவில் பெண் பாடகி ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 11.05 மணியளவில் 26 வயது பாடகியுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்விற்கு பின்னர் அந்த பாடகியிடம் சம்பந்தப்பட்ட நபர் ஆபாச சேட்டைப் புரிந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் புகாருக்கு பின்னர் கைது செய்யப்பட்ட அந்த நபர் விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மலேக் ஹசிம் தெரிவித்தார்.

Related News