Apr 25, 2026
Thisaigal NewsYouTube
வெடித்தது எரிவாயு குழாயா? குவாந்தானில் பரவிய வீடியோவால் பரபரப்பு: தீயணைப்புத் துறை விளக்கம்
தற்போதைய செய்திகள்

வெடித்தது எரிவாயு குழாயா? குவாந்தானில் பரவிய வீடியோவால் பரபரப்பு: தீயணைப்புத் துறை விளக்கம்

Share:

பகாங், குவந்தான், இந்திரா மக்கோத்தா பகுதியில் எரிவாயு குழாய் வெடித்ததாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விளக்கமளித்துள்ள பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் முகமட் சலாவுதீன் ஈசா, அது ஒரு தீயணைப்பு ஒத்திகை மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

"எக்ஸ்-இந்திரா" எனும் குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை, அவசரக் காலங்களில் பாதுகாப்புப் படைகளின் தயார்நிலையைச் சோதிக்கவே நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசாங்க ஏஜென்சிகள் பங்கேற்றன.

வீடியோவில் தெரிந்த கரும்புகை மற்றும் ஆம்புலன்ஸ் சத்தங்கள் அனைத்தும் ஒத்திகையின் ஒரு பகுதியே என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் விளக்கினார்.

கடந்த ஆண்டு புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த உண்மை விபத்தோடு ஒப்பிட்டுப் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

Related News

பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி

பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி

ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை

சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை

3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்

3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்

நீதித்துறையின் சிங்கம் இனி ஊழல் தடுப்புப் படையின் நாயகன்: பிரதமர் அன்வார் வர்ணனை

நீதித்துறையின் சிங்கம் இனி ஊழல் தடுப்புப் படையின் நாயகன்: பிரதமர் அன்வார் வர்ணனை