May 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக
தற்போதைய செய்திகள்

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

Share:

புத்ராஜெயா, ஜனவரி.23-

தேசியக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்தவும், குறிப்பாக 5 வயது சிறுவர்களுக்கான பாலர் பள்ளி மற்றும் 6 வயது சிறுவர்களுக்கான முதலாம் ஆண்டு சேர்க்கையைத் துரிதப்படுத்தவும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கல்வி அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு 6 மற்றும் 7 வயது சிறுவர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வரும் சூழல் ஏற்படக்கூடும் என்பதால், கல்வி முறை அதற்குத் தயாராக இருப்பதை உறுதிச் செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று அரசாங்க செய்தி தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

தேவையான நிதி ஒதுக்கீடு, போதிய ஆசிரியர்களைத் தயார் செய்தல் மற்றும் புதிய வகுப்பறைகளைக் கட்டுதல் ஆகிய பணிகளில் கவனம் செலுத்த பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

புதிய வகுப்பறைகளை விரைவாகக் கட்டி முடிக்க, பொதுப்பணித் துறையுடன் இணைந்து 'தொழில்துறை கட்டுமான அமைப்பை' பயன்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்பதையும் தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ ஃபாமி தெளிவுபடுத்தினார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்