Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக
தற்போதைய செய்திகள்

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

Share:

புத்ராஜெயா, ஜனவரி.23-

தேசியக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்தவும், குறிப்பாக 5 வயது சிறுவர்களுக்கான பாலர் பள்ளி மற்றும் 6 வயது சிறுவர்களுக்கான முதலாம் ஆண்டு சேர்க்கையைத் துரிதப்படுத்தவும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கல்வி அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு 6 மற்றும் 7 வயது சிறுவர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வரும் சூழல் ஏற்படக்கூடும் என்பதால், கல்வி முறை அதற்குத் தயாராக இருப்பதை உறுதிச் செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று அரசாங்க செய்தி தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

தேவையான நிதி ஒதுக்கீடு, போதிய ஆசிரியர்களைத் தயார் செய்தல் மற்றும் புதிய வகுப்பறைகளைக் கட்டுதல் ஆகிய பணிகளில் கவனம் செலுத்த பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

புதிய வகுப்பறைகளை விரைவாகக் கட்டி முடிக்க, பொதுப்பணித் துறையுடன் இணைந்து 'தொழில்துறை கட்டுமான அமைப்பை' பயன்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்பதையும் தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ ஃபாமி தெளிவுபடுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!