May 30, 2026
Thisaigal NewsYouTube
ஆக்ரோஷமான மாட்டை சுட்ட சம்பவம்: பெர்லிஸ் மந்திரி பெசாரின் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஆக்ரோஷமான மாட்டை சுட்ட சம்பவம்: பெர்லிஸ் மந்திரி பெசாரின் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

Share:

ஹஜ்ஜுப் பெருநாளின் போது, பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா, மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்ட விவகாரதில், அவர் பயன்படுத்தியதாக நம்பப்படும் Shotgun துப்பாக்கி மற்றும் ஒன்பது தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவிய 38 வினாடிகள் கொண்ட காணொளி தொடர்பாக புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மந்திரி பெசாரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் யுஷாரிஃபுதீன் யுசோப் தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணையில், அந்த ஷாட்கன் துப்பாக்கிக்கான செல்லுபடியாகும் உரிமம் அபு பக்காரிடம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணியாளர்களை அச்சுறுத்திய அந்த ஆக்ரோஷமான மாட்டை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

Related News

உலகளவில் எரிசக்தி நெருக்கடி தொடர்கிறது / அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பொருளாதார அமைச்சர் கருத்து

உலகளவில் எரிசக்தி நெருக்கடி தொடர்கிறது / அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பொருளாதார அமைச்சர் கருத்து

விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சி -  ஜூன் 1 முதல் ஒப்ஸ் கேசான் 6.0 சிறப்பு நடவடிக்கை

விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சி - ஜூன் 1 முதல் ஒப்ஸ் கேசான் 6.0 சிறப்பு நடவடிக்கை

சுங்கை பூலோ தீவிபத்தில் இரு தொழிற்சாலைகள் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது

சுங்கை பூலோ தீவிபத்தில் இரு தொழிற்சாலைகள் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது

சபாவிற்கான இடைக்கால சிறப்பு மானியத்தை 1.5 பில்லியனாக உயர்த்திய அன்வார் / 40 விழுக்காடு வருமான உரிமை வழங்குவதிலும் கூட்டரசு அரசாங்கம் உறுதி

சபாவிற்கான இடைக்கால சிறப்பு மானியத்தை 1.5 பில்லியனாக உயர்த்திய அன்வார் / 40 விழுக்காடு வருமான உரிமை வழங்குவதிலும் கூட்டரசு அரசாங்கம் உறுதி

எவரெஸ்ட்டில் மாயமான மலேசியர் ஹவாரி இறந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் - நேபாள அரசிடம் மலேசிய குழு கோரிக்கை

எவரெஸ்ட்டில் மாயமான மலேசியர் ஹவாரி இறந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் - நேபாள அரசிடம் மலேசிய குழு கோரிக்கை

சபா, சரவாக் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த மதானி அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்

சபா, சரவாக் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த மதானி அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்