May 22, 2026
Thisaigal NewsYouTube
23வது மாடியிலிருந்து காதலியை தள்ளிவிட்ட காதலன்
தற்போதைய செய்திகள்

23வது மாடியிலிருந்து காதலியை தள்ளிவிட்ட காதலன்

Share:

ஷா அலாம், பிப்ரவரி 29 -

சிலாங்கூர்,செத்திய அலாம் மில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 23 ஆவது மாடியிலிருந்து தாய்லாந்து பெண் ஒருவர் தனது காதலனால் தள்ளிவிடப்பட்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 10:02 மணியளவில் காவல்நிலையத்திற்கு புகார் கிடைக்க பெற்றதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொஹாமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 32 வயதுடைய அப்பெண் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக மொஹாமட் இக்பால் கூறினார்.

அவ்விருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதிக்கப்பட்டவர் 23 ஆவது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு பின் அப்பெண் ஏழாவது மாடியில் விழுந்ததாக மொஹாமட் இக்பால் விவரித்தார்.

37 வயதுடைய சந்தேகிக்கும் உள்ளூர் ஆடவர் நேற்று இரவு 10:10 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே அவர் மீது 7 குற்றச்செயல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மொஹாமட் இக்பால் இன்று அறிவித்தார்.

Related News