சிரம்பான், ஜன - 9
சிகாமாட் அருகிலுள்ள பன்டார் வாரிசான் புத்தெரி, Precint 4, Lorong A40- யில் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள ஒப்பந்தராரை மஜ்லிஸ் பன்டாராயா சிரம்பான்(MBS) நியமித்துள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்தில் ஒதுக்கீடு கிடைத்தவுடன் பழுதுபார்க்கும் பணி தொடங்கிவிடும் என்று சிரம்பான் நகராண்மை டத்தோ, டத்தோ மஸ்ரி ரசாலி தெரிவித்தார்.
வீட்டு மனை நிலத்தை பழுதுபார்க்கும் பணிக்கு நேரடி பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தாரரை நியமித்திருப்பதாகவும் அதற்கான வடிவமைப்பு முடிந்துவிட்டது என்றும் மஸ்ரி ரசாலி கூறினார்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சீரமைப்பு பணிகளுக்கு ஒரு சிறப்பு தடுப்புச் சுவர் தேவைப்படுவதை கண்டறியப்பட்டது. அதற்கான செலவுகள் அதிகமாக இருப்பதாகவும் மஸ்ரி ரசாலிவிவரித்தார்.
அவ்விருப்பிடத்தில் நிலம் சரிந்த சம்பவம் குறித்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும் MBS -யிடம் இருந்து எந்தவொரு பதிலும் கிடைக்க பெறவில்லை என்று குடியிருப்பாளர்கள் அளித்த புகாருக்கு மஸ்ரி ரசாலிபதிலளித்தார்.








