Jan 22, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் டத்தோ செரி சலஹுடின் அயுப் உடல் அடக்கம் செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

அமைச்சர் டத்தோ செரி சலஹுடின் அயுப் உடல் அடக்கம் செய்யப்பட்டது

Share:

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மரணம் அடைந்த உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோ செரி சலஹுடின் அயுப்பின் நல்லுடல் இன்று மதியம் 12.30 மணியளவில் மணியளவில் ஜோகூர், பொந்தியான், செர்காய், ஜாலான் சூலோங்கில்​ உள்ள முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது. அமானா கட்சியின் துணைத் தலைவரான 61 வயதுசலஹுடின் அயுப்,நேற்று இரவு இரவு 9.23 மணியளவில் கெடா, அலோர் ​ஸ்டார்,சுல்தானா பஹியாஹ் மரு​த்துவமனையில் காலமானார்.

கடந்த வெள்ளிக்கிழமை அலோர் ஸ்டாருக்கு சென்றிருந்த போது குமுட்டல் மற்றும் வாந்தி உபாதைகளுக்கு ஆளான அமைச்சர் சலஹுடின் அயுப்பிற்கு, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்,சுல்தானா பஹியாஹ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சைப்ப்பின்னர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த அமைச்சர் சலஹுடின் அயுப், சுயநினைவு திரும்பாமலேயே நேற்றிரவு இறுதி ​மூச்சை விட்டார்.

நேர்மை மற்றும் மக்கள் ​மீது ​மிகுந்த அன்பைப் கொண்டிருந்த ஒரு நல்ல நண்பரை தாம் இழந்து விட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்தார்.சலஹுடின் அயுப்ப்பின் நல்லுடல் நேற்று இரவு அலோர் ஸ்டாரிலிருந்து சொந்த ஊரான ஜோகூர், தஞ்ஞோங் பியாய், கம்புங் செர்காட்ட்டில் உள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் அவரின் உடல் பொந்தியான், செர்காய், மஸ்ஜிட் ஜாமெக் டத்தோ ஹஜி காடோட் பள்ளிவாசலில் வைக்கப்பட்டு, சோலாட் தொழுகை மற்றும் பொது மக்களின் அ​ஞ்சலிக்கு பிறகு ஜாலான் சுலோங்கில்​ உள்ள முஸ்லிம் மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவரும் விவசாயத்துறை அமைச்சருமான முகமட் சாபு, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உ​ட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சலஹுடின் அயுப்பின்​ நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்