அம்பாங், பாண்டன் இந்தான் னில் உள்ள ஓர் உணவகத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இரு கும்பல்கள் கைலப்பில் ஈடுபட்டதுடன் உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் மேஜைகளை தூக்கி எறிந்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு எதிரான தடுப்புக்காவல் இன்று மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் வரும் புதன் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். டிக் டாக் கில் பகிரப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலை தீர்த்துக்கொள்வதற்கு அவ்விடத்திற்கு வந்த போது அது சண்டையாக மாறியது. உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் மேஜைகள் பறக்கும் அளவிற்கு நடந்த இந்த சண்டை பு தொடர்பில் போலீசார் மொத்தம் 10 பேரை தேடி வந்தனர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


