அம்பாங், பாண்டன் இந்தான் னில் உள்ள ஓர் உணவகத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இரு கும்பல்கள் கைலப்பில் ஈடுபட்டதுடன் உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் மேஜைகளை தூக்கி எறிந்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு எதிரான தடுப்புக்காவல் இன்று மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் வரும் புதன் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். டிக் டாக் கில் பகிரப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலை தீர்த்துக்கொள்வதற்கு அவ்விடத்திற்கு வந்த போது அது சண்டையாக மாறியது. உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் மேஜைகள் பறக்கும் அளவிற்கு நடந்த இந்த சண்டை பு தொடர்பில் போலீசார் மொத்தம் 10 பேரை தேடி வந்தனர்.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்


