டத்தோ அந்தஸ்தை கொண்ட தொழில் அதிபர் ஒருவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டது தொடர்பில் விசாரணைக்கு தாம் அழைக்கப்படலாம் என்று கூறப்படும் தகவல், வெறும் வதந்தியாகும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார். இது போன்ற வதந்திகளுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
அம்லா எனப்படும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பாக நாட்டின் முன்னணி தொழில் அதிபரும், திரைப்பட விநியோகிப்பு மற்றும் மாபெரும் கலைநிகழ்ச்சி ஏற்பட்டாளருமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சென்டிரியன் பெர்ஹாட் டின் உரிமையாளரான டத்தோ மாலிக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர்,விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் முன்னாள் மனித வள அமைச்சரான டத்தோஸ்ரீ சரவணன் எவ்.எம்.தி யிடம் மேற்கண்டவாறு எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


