Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தஞ்சோங் பூங்கா - தெலுக் பஹாங் கடலோர நெடுஞ்சாலை 2026 இல் தொடங்கும்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்.27-

பினாங்கு தீவில் தஞ்சோங் பூங்கா – தெலுக் பஹாங் கடலோர நெடுஞ்சாலைத் திட்டம், தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டு, வரும் 2026 ஆம் ஆண்டில் அதன் நிர்மாணிப்புப் பணி தொடங்கும் என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அறிவித்துள்ளார்.

2.4 பில்லியன் ரிங்கிட் செலவிலான இந்த கடலோர நெடுஞ்சாலைத் திட்டம் 10.61 கிலோ மீட்டர் தூரமாகும். இது, பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 46 பில்லியன் ரிங்கிட் செலவினத்தில் பினாங்கு போக்குவரத்து பிரதான திட்டத்தில் ஒரு பகுதியாகவும் இது விளங்கும் என்று சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.

இந்த கடலோர நெடுஞ்சாலைத் திட்டம், தஞ்சோங் பூங்காவிலிருந்து தெலுக் பஹாங் வரையிலான பயண நேரத்தை 45 நிமிடத்திலிருந்து 7 நிமிடமாக குறைக்க வல்லதாகும் என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து தாக்கத்தை இந்த கடலோர நெடுஞ்சாலைத் திட்டம் வெகுவாகக் குறைக்கும் என்றும் சோவ் கோன் யோவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை