கோலாலம்பூர், நவ. 16-
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசோப் பெயரை பயன்படுத்தி சரவா மாநிலத்தில் போலி கடிதம் வெளியிடப்பட்டு இருப்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடீன் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
சில தனிநபர்களுக்கு அனுப்பட்டுள்ள இந்த போலிக் கடிதங்கள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா, பிரிஸிண்ட் 7 போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்போலீஸ் புகாரை துணைப்பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி செய்து இருப்பதாகவும் ஐஜிபி விளக்கினார்.








