சுங்கைப்பட்டாணியில் ள்ளிக்கு வெளியே மாணவிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய 13 முதல் 16 வயதுக்குட்பட்ட 6 முதல் 10 மாணவிகளைக் கோலா மூடா மாவட்டப் போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் அடையாளம் கண்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் அவதூறாகப் பேசிக் கொண்டதே இந்த மோதலுக்குக் காரணம் என நம்பப்படும் நிலையில், இதில் சில மாணவிகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவிகள் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும், தற்போதைக்குக் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
பொது இடத்தில் மோதலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் இந்த சம்பவம் குறித்து கு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை, 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.








