Mar 12, 2026
Thisaigal NewsYouTube
9 துப்பாக்கிச் சூடுகள், ஆடவர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

9 துப்பாக்கிச் சூடுகள், ஆடவர் தேடப்படுகிறார்

Share:

கோலாலம்பூர் ஜாலான் கெப்போங்கில் போலீஸ் சோதனையின் போது காரை நிறுத்த மறுத்துவிட்ட இரு நபர்கள் சென்ற காரை நோக்கி போலீசார் 9 துப்பாக்கிச் சூடு பிரயோகத்தை நடத்தினர்.
எனினும் போலீசாரின் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் இருந்து மிக லாவகமாக தப்பிய இரு நபர்களை தேடும் முயற்சியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்று காலை 7:45 மணியளவில் ஜாலான் கெப்போங், லாமான் ரிம்புனான் சாலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் ஓர் உள்ளூர் வாசியான முக்கிய சந்தேகப் பேர்வழி 40 வயது கணேசன் உலகநாதனை போலீசார் தேடிவருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர்டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் பயன்படுத்திய புரோத்தோன் விரா காரின் டயர்களை நோக்கி மூன்று போலீஸ்காரர்கள் துப்பாக்கி பிரயோகம் நடத்தும் காட்சியைக் கொண்ட காணொலி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டு இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலையமகத்தின் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமது ஷுஹைலி இதனை தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காரின் டயர்கள் வெடித்ததால் கார் தடம் புரண்ட வேளையில் அந்த இரு நபர்களும் ஒரு வீடமைப்புப் பகுதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக முகமது ஷுஹைலி குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!