Jul 24, 2026
Thisaigal NewsYouTube
2,000 மீத்தேன் சிலிண்டர்கள் வெடித்து பரபரப்பு: ஸ்ரீ கம்பாங்கான் மொத்த சந்தையில் பயங்கர தீ
தற்போதைய செய்திகள்

2,000 மீத்தேன் சிலிண்டர்கள் வெடித்து பரபரப்பு: ஸ்ரீ கம்பாங்கான் மொத்த சந்தையில் பயங்கர தீ

Share:

சிலாங்கூர் மாநிலம் ஸ்ரீ கேம்பாங்கன் பகுதியில் உள்ள மொத்த சந்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், அங்கு இருந்த சுமார் 2,000 மீத்தேன் எரிவாயு சிலிண்டர்கள் தொடர் வெடிப்பை ஏற்படுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

நேற்று இரவு சுமார் 10.50 மணியளவில் ஏற்பட்ட தீ, பலத்த காற்றால் வேகமாக பரவி, தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலிருந்தே தென்பட்டது.

இந்நிலையில், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 68 தீயணைப்பு அதிகாரிகள், 67 தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் 19 வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் பல தொடர் வெடிப்புகள் ஏற்பட்ட போதிலும், தீ அதிகாலை 1.20 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிவித்துள்ளது.

Related News

ஆயுதமேந்திய கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்களில் தொடர்பு / வினோத் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆயுதமேந்திய கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்களில் தொடர்பு / வினோத் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

இந்திய சமூக மேம்பாட்டில் கல்வி, திறன் வளர்ச்சிக்கு முன்னுரிமை - அன்வார் இப்ராகிம் வலியுறுத்து

இந்திய சமூக மேம்பாட்டில் கல்வி, திறன் வளர்ச்சிக்கு முன்னுரிமை - அன்வார் இப்ராகிம் வலியுறுத்து

9 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட பினாங்கு மாநில அருங்காட்சியகம்

9 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட பினாங்கு மாநில அருங்காட்சியகம்

போர் பதற்றம் எதிரொலி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா மீண்டும் ஃபார்முலா ஒன் போட்டியை நடத்த வாய்ப்பு?

போர் பதற்றம் எதிரொலி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா மீண்டும் ஃபார்முலா ஒன் போட்டியை நடத்த வாய்ப்பு?

கிள்ளான் கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் தப்பிய சந்தேகநபர் கைது

கிள்ளான் கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் தப்பிய சந்தேகநபர் கைது

ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் துணைப் போலீஸ் படைத்தலைவர் அயோப் கான்

ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் துணைப் போலீஸ் படைத்தலைவர் அயோப் கான்