Mar 28, 2026
Thisaigal NewsYouTube
யானை மிதித்து குத்தகைத் தொழிலாளர் மரணம்
தற்போதைய செய்திகள்

யானை மிதித்து குத்தகைத் தொழிலாளர் மரணம்

Share:

மெர்சிங்,செப்டம்பர் 26-

தங்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் யானை ஒன்றை விரட்ட முயற்சி செய்த குத்தகைத் தொழிலாளர் ஒருவர், அந்த யானை மிதித்து பரிதாபமாக மாண்டார். அதேவேளையில் அவரின் நண்பர் யானையால் தூக்கி எறியப்பட்டு, கடுங் காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் ஜோகூர், மெர்சிங், ஃபெல்டா தெங்கரோ லிமா தேசிய இடைநிலைப்பள்ளி அருகில் உள்ள வனப்பகுதியில் நிகழ்ந்தது.

வனப்பகுதியை சுத்தம் செய்யும் பணியின் போது, அவர்களை அந்த மதம் கொண்ட யானை மிக மூர்க்கமாக தாக்கியதாக மெர்சிங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஷெரீப் ஷாய் ஷெரீப் மொண்டோய் தெரிவித்தார்.

உயிரிழந்த அந்த குத்தகைப் பணியாளரின் உடல் சவப்பரிசோதனைக்காகமெர்சிங் மருத்துமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்