வீடுகளில் உள்ளாடைகளை திருடுவதை பழக்கமாக கொண்டவர் என்று நம்பப்படும் நபர் ஒருவரை பந்திங் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, அதிகாலை 2.50 மணியளவில் பந்திங்கில் உள்ள ஒரு வீட்டின் வெளியே உள்ள துணிக் கொடியில் உலறவைக்கப்பட்ட உள்ளாடைகளை அந்த நபர் திருடிக்கொண்டு இருந்த காட்சி, வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் இரவு 8 மணியளவில் 32 வயது மாதுவிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் CCTV கேமராவில் பதிவான அந்த நபரின் உருவத்தை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட நபர் தேடப்பட்டு வருவதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ரிட்வான் தெரிவித்துள்ளார்.








