Jan 17, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் உத்தரவு குறித்து தற்காப்பு அமைச்சு விளக்கம் கோருகிறது
தற்போதைய செய்திகள்

பிரதமரின் உத்தரவு குறித்து தற்காப்பு அமைச்சு விளக்கம் கோருகிறது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.17-

ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆயுதப்படை மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் அனைத்துக் கொள்முதல் முடிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளது குறித்து, தற்காப்பு அமைச்சு மேலதிக தகவல்களையும், விளக்கங்களையும் கோரி வருகின்றது.

பிரதமரின் உத்தரவை அமைச்சு கட்டாயம் பின்பற்றும் என்றாலும் கூட, தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பு, நிதி விதிமுறைகள் மற்றும் சட்டத் தேவைகளுக்கு ஏற்ப அதைச் செயல்படுத்துவது குறித்த விவரங்களை ஆராயும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பாதுகாப்புத் தயார் நிலையும், அதன் செயல்பாடுகளின் தொடர்ச்சியும் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் உட்பட, தற்போது நடைமுறையில் உள்ள கொள்முதல் நடவடிக்கைகளின் மீது, இந்த முடிவு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து முழுமையான மதிப்பாய்வு மேற்கொள்ளப்படும் என்றும் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Related News

இந்தோனேசிய நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை: மெட்மலேசியா

இந்தோனேசிய நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை: மெட்மலேசியா

கைது செய்யப்பட்ட முன்னாள் ஃஎப்எம்டி செய்தியாளர் ரேக்ஸ் டான் இன்று விடுவிக்கப்படுவார்

கைது செய்யப்பட்ட முன்னாள் ஃஎப்எம்டி செய்தியாளர் ரேக்ஸ் டான் இன்று விடுவிக்கப்படுவார்

சாரா உதவித் திட்ட மேம்பாடுகள் முழுமையான அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டவை: மக்களின் அடிப்படைத் தேவைகளை மடானி அரசு தொடர்ந்து உறுதிச் செய்யும் - அன்வார் நம்பிக்கை!

சாரா உதவித் திட்ட மேம்பாடுகள் முழுமையான அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டவை: மக்களின் அடிப்படைத் தேவைகளை மடானி அரசு தொடர்ந்து உறுதிச் செய்யும் - அன்வார் நம்பிக்கை!

பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட மாணவர் விசாரணைக்குத் தகுதி பெற்றார்

பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட மாணவர் விசாரணைக்குத் தகுதி பெற்றார்

அமைதியான பேரணிச் சட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முடிவை ஏஜிசி கைவிட்டது

அமைதியான பேரணிச் சட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முடிவை ஏஜிசி கைவிட்டது

கண் கட்டு வித்தை மூலம் கைவரிசை: திருட்டில் ஈடுபட்ட 5 ஈரானியர்கள் மலேசியாவில் கைது

கண் கட்டு வித்தை மூலம் கைவரிசை: திருட்டில் ஈடுபட்ட 5 ஈரானியர்கள் மலேசியாவில் கைது

பிரதமரின் உத்தரவு குறித்து தற்காப்பு அமைச்சு விளக்கம் கோர... | Thisaigal News