Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் உத்தரவு குறித்து தற்காப்பு அமைச்சு விளக்கம் கோருகிறது
தற்போதைய செய்திகள்

பிரதமரின் உத்தரவு குறித்து தற்காப்பு அமைச்சு விளக்கம் கோருகிறது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.17-

ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆயுதப்படை மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் அனைத்துக் கொள்முதல் முடிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளது குறித்து, தற்காப்பு அமைச்சு மேலதிக தகவல்களையும், விளக்கங்களையும் கோரி வருகின்றது.

பிரதமரின் உத்தரவை அமைச்சு கட்டாயம் பின்பற்றும் என்றாலும் கூட, தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பு, நிதி விதிமுறைகள் மற்றும் சட்டத் தேவைகளுக்கு ஏற்ப அதைச் செயல்படுத்துவது குறித்த விவரங்களை ஆராயும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பாதுகாப்புத் தயார் நிலையும், அதன் செயல்பாடுகளின் தொடர்ச்சியும் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் உட்பட, தற்போது நடைமுறையில் உள்ள கொள்முதல் நடவடிக்கைகளின் மீது, இந்த முடிவு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து முழுமையான மதிப்பாய்வு மேற்கொள்ளப்படும் என்றும் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்