வாக்களிப்பதற்கு தனது விரலில் மையிட்டப்பின்னர் வாக்குச்சீட்டை பெற்றுக்கொள்ள முற்பட்ட மூதாட்டி ஒருவர், வாக்களிப்பு மையத்தில் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணம் அடைந்து விட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம், நெகிரி செம்பிலான், கெமெஞ்சே, ரோகன் தேசியப் பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் நிகழ்ந்தது. 83 வயதுடைய அந்த முதாட்டியை காப்பாற்றுவதற்கு அவசர சிகிச்சை அளிக்க முற்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அனுவல் வஹாப் தெரிவித்தார். ரத்த அழுத்த நோயாளியான அந்த மூதாட்டி, உம்ரா பயணத்திற்கு பின்னர் உடல் நலன் குன்றியிருந்ததாகவும், இம்முறை வாக்களித்தே தீருவேன் என்று கூறி வாக்களிப்பு மையத்திற்கு காரில் வந்ததாகவும் தெரிவந்துள்ளது என்று அனுவல் வஹாப் குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


