வாக்களிப்பதற்கு தனது விரலில் மையிட்டப்பின்னர் வாக்குச்சீட்டை பெற்றுக்கொள்ள முற்பட்ட மூதாட்டி ஒருவர், வாக்களிப்பு மையத்தில் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணம் அடைந்து விட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம், நெகிரி செம்பிலான், கெமெஞ்சே, ரோகன் தேசியப் பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் நிகழ்ந்தது. 83 வயதுடைய அந்த முதாட்டியை காப்பாற்றுவதற்கு அவசர சிகிச்சை அளிக்க முற்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அனுவல் வஹாப் தெரிவித்தார். ரத்த அழுத்த நோயாளியான அந்த மூதாட்டி, உம்ரா பயணத்திற்கு பின்னர் உடல் நலன் குன்றியிருந்ததாகவும், இம்முறை வாக்களித்தே தீருவேன் என்று கூறி வாக்களிப்பு மையத்திற்கு காரில் வந்ததாகவும் தெரிவந்துள்ளது என்று அனுவல் வஹாப் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


