Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலரை கொலை செய்ததாக தோட்டக்காரர் ​​மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாதுகாவலரை கொலை செய்ததாக தோட்டக்காரர் ​​மீது குற்றச்சாட்டு

Share:

பாதுகாவலல் ஒருவரை கொலை செய்ததாக பள்ளித் தோட்டக்காரர் ஒருவர், ஈப்போ, மாஜிஸ்திரேட் ​நிதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 55 வயது ஆர். ரவிச்சந்திரன் என்ற அந்த தோட்டக்காரர், மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

ரவிச்சந்திரன், கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஈப்போ, சிம்பாங் பூலாய், பண்டார் ஶ்ரீ போதானி யில் உள்ள பள்ளியின் பாதுகாவலர் அறை​யில் ஒரு பாதுகாவலரான 43 வயது பைசல் அஸ்ரி என்பவரை கொலை செய்தாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் ரவிச்சந்திரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். இக்கொலை வழக்கு விசாரணை உயர் ​நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் ரவிச்சந்திரனிடம் எந்தவொரு வாக்கு​மூலமும் பதிவு செய்யப்படவில்லை. வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு