Apr 26, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து அரிசியைக் கடத்திய லாரி ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து அரிசியைக் கடத்திய லாரி ஓட்டுநர் கைது

Share:

தும்பாட், ஏப்ரல்.26-

கிளந்தான், தும்பாட் பகுதியில் சுமார் 34 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 8.5 டன் தாய்லாந்து அரிசியை லாரியில் கடத்திச் சென்ற 31 வயதுடைய நபர் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக அப்படையின் மூத்த உதவி ஆணையர் அஹ்மாட் ராட்ஸி ஹுசேன் தெரிவித்தார். ஒரு முறை அரிசியைக் கடத்திக் கொண்டுச் செல்ல வெறும் 100 ரிங்கிட் மட்டுமே அந்த நபர் கூலியாகப் பெற்றுள்ள நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனம் ஓட்டிய போது காவற்படையினர் அவரை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி, லாரி ஆகியவற்றின் மொத்த மதிப்பு 114 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் குறித்து தேசிய அரிசி - நெல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News