May 15, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளியையொட்டி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் பிரிக்பீல்ட்ஸிற்கு வருகை
தற்போதைய செய்திகள்

தீபாவளியையொட்டி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் பிரிக்பீல்ட்ஸிற்கு வருகை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.16-

நாடு முழுவதும் உள்ள இந்துக்கள், தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில் இந்துக்களின் தீபாவளி ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும் அவர்களைச் சந்திப்பதற்கும் இன்று மாலை 4 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை புரிந்தார்.

பிரதமரின் வருகையைத் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறைத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் எதிர்கொண்டு வரவேற்றார். லிட்டில் இந்தியாவில் தீபாவளியையொட்டி கடைகளை அமைத்து இருக்கும் வணிகர்களையும், கடை உரிமையாளர்களையும், பொதுமக்களையும் பிரதமர் நேரில் சந்தித்து தீபாவளி ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பிரிக்பீல்ட்ஸ் வணிகச் சமூகத்தைச் சந்தித்த அதே வேளையில், மெட்ராஸ் பேக்கரி கடையில் தேநீர், பலகாரங்களை அருந்தி விட்டு, கடைசி நேர ஷாப்பிங்கிற்கு திரண்ட மக்களுடன் உற்காசம் மிகுந்த சூழலில் பிரதமர் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு