மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ரா ஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
வேஷ்டி, வெள்ளை நிற தி-செட் அணிந்து மிக எளிமையாக காணப்பட்ட 72 வயதுடைய ரஜினிகாந்தை பிரதமர் அன்வார் இரு கரம் கூப்பி வரவேற்றார்.
அனைத்துலக திரைப்பட உலகில் மிக பரீச்சயமான இந்திய திரைப்பட நச்சத்திரத்தை வரவேற்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
தம்முடைய போரட்டக் காலத்தில் குறிப்பாக மக்கள் துயருற்று இருந்த போது தமக்கு ஆதரவு நல்கிய ரஜினிகாந்திற்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த குறுகிய நேர சந்திப்பில் நஜினிகாந்துடன் பலதரப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்ட போதிலும் தமது போராட்டத்தின் சில முக்கிய நிகழ்வுகளை ரஜினிகாந்தின் எதிர்கால நடிப்பிலான திரைப்படங்களில் சேர்த்துக் கொள்வதுக் குறித்தும் கலந்து உரையாடியதாக அன்வார் தெரிவித்தார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து


