காஜாங், புக்கிட் ப்ரோகா மலைப்பகுதியில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாது ஒருவர், மலையிலிருந்து கீழே இறங்கும் போது கால் இடறி வலது காலில் காயத்திற்கு ஆளானார். இச்சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது.
அந்த மாதுவினால் மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளானதைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி நாடப்பட்டது. இன்று காலை 10.53 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், 30 வயதுடைய அந்த மாதுவை ஸ்ரெட்ச்ர் மூலம் மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் சுகாதார அமைச்சின் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


