காஜாங், புக்கிட் ப்ரோகா மலைப்பகுதியில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாது ஒருவர், மலையிலிருந்து கீழே இறங்கும் போது கால் இடறி வலது காலில் காயத்திற்கு ஆளானார். இச்சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது.
அந்த மாதுவினால் மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளானதைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி நாடப்பட்டது. இன்று காலை 10.53 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், 30 வயதுடைய அந்த மாதுவை ஸ்ரெட்ச்ர் மூலம் மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் சுகாதார அமைச்சின் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


