Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காயமுற்ற மாதுவை தீயணைப்புப்படையினர் உதவினர்
தற்போதைய செய்திகள்

காயமுற்ற மாதுவை தீயணைப்புப்படையினர் உதவினர்

Share:

காஜாங், புக்கிட் ப்ரோகா மலைப்பகுதியில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாது ஒருவர், மலையிலிருந்து கீழே இறங்கும் போது கால் இடறி வலது காலில் காயத்திற்கு ஆளானார். இச்சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது.

அந்த மாதுவினால் மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளானதைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி நாடப்பட்டது. இன்று காலை 10.53 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், 30 வயதுடைய அந்த மாதுவை ஸ்ரெட்ச்ர் மூலம் மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் சுகாதார அமைச்சின் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related News

காயமுற்ற மாதுவை தீயணைப்புப்படையினர் உதவினர் | Thisaigal News