சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் மாதம் வரை 11 மாத காலகட்டத்தில் 311 பேர் காணவில்லை என்று அரச மலேசிய போலீஸ் படை புகார் பெற்று இருப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் 161 பேர் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். 150 பேர், 17 வயதுக்கும் கீழ் பட்டவர்கள் ஆவர் என்று டத்தோ சசிகலா தேவி குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தத்தில் 151 ஆண்களும், 160 பெண்களும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
போலீஸ் புகார் அளிக்கப்பட்டப் பின்னரும், இன்னமும் கண்டு பிடிக்க முடியாதவர்களின் எண்ணிக்கை 82 பேராகும். அவர்களின் 50 பேர் ஆண்கள், எஞ்சியவர்கள் பெண்கள் என்று டத்தோ சசிகலாதேவி குறிப்பிட்டார்.
பதின்ம வயதுடையவர்கள் காாணமல் போவதற்கு முக்கிய காரணம், சுதந்திரத்தை விரும்புகின்றனர் என்று தங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ சசிகலாதேவி தெரிவித்தார்.








