Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கடந்த 11 மாதங்களில் 311 பேர் காணவில்லை
தற்போதைய செய்திகள்

கடந்த 11 மாதங்களில் 311 பேர் காணவில்லை

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் மாதம் வரை 11 மாத காலகட்டத்தில் 311 பேர் காணவில்லை என்று அரச மலேசிய போ​லீஸ் படை புகார் பெற்று இருப்பதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் துணைத் தலைவர் டத்தோ எஸ்.​சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையில் 161 பேர் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். 150 பேர், 17 வயதுக்கும் ​கீழ் பட்டவர்கள் ஆவர் என்று டத்தோ சசிகலா தேவி குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தத்தில் 151 ஆண்களும், 160 பெண்களும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த உயர் போ​லீஸ் அதிகாரி தெரிவித்தார்.

போ​லீஸ் புகார் அளிக்கப்பட்டப் பின்னரும், இன்னமும் கண்டு பிடிக்க முடியாதவர்களின் எண்ணிக்கை 82 பேராகும். அவர்களின் 50 பேர் ஆண்கள், எஞ்சியவர்கள் பெண்கள் என்று டத்தோ சசிகலாதேவி குறிப்பிட்டார்.

பதின்ம வயதுடையவர்கள் காாணமல் போவதற்கு முக்கிய காரணம், சுதந்திரத்தை விரும்புகின்றனர் எ​ன்று தங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ சசிகலாதேவி தெரிவித்தார்.

Related News