"கெங் 24 ஹங் ஹங்"என்ற ரகசியக் கும்பலின் மூத்த உறுப்பினரான சரவாக் , கூச்சிங்கைச் சேர்ந்த 40 வயது நபர், சட்டவிரோதமாகத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட 7 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட உரிமம் இன்றி 'ஸ்டோகர்' ரகத் தானியங்கி துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறை மற்றும் 6 பிரம்படிகள் விதிக்கப்படலாம். நீதிபதி முஷீதா அப்துல் ஹலிம் அவருக்குப் பிணை வழங்க மறுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முறையான அனுமதியின்றி 120 தோட்டாக்களை வைத்திருந்ததாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் மீது மேலும் 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.








