Mar 14, 2026
Thisaigal NewsYouTube
E-Hailing வாகன ஒட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

E-Hailing வாகன ஒட்டுநர் கைது

Share:

தமது காரில் பயணம் செய்தவரும், சீன நாட்டைச் சேர்ந்த உள்ளூர் பல்கலைக்கழக மாணவியுமான இளம் பெண்ணை, மடக்கு நாற்காலியினால் அடித்து காயப்படுத்தியதாக நம்பப்படும் e-hailing வாகன ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

32 வயதுடைய அந்த டாக்சியோட்டி, நேற்று இரவு 7.15 மணியளவில் குவந்தான், போலீஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முஹமாட் சஹாரி வான் புசு தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவியை தாக்குவதற்கு அந்த வாகன ஓட்டுநர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு மடக்கு நாற்காலியையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
காரின் கதவை வேகமாக சாத்தினார் என்பதற்காக ஒரு மாற்றுத் திறனாளியான வாகன ஓட்டுநர், அந்த மாணவியை நாற்காலியினால் தாக்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக வான் சஹாரி தெரிவித்தார்.

Related News