சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பொருட்கள் ஏற்றப்பட்டுக்கொண்டு இருந்தகொண்தெனா டிரைய்லரில், கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் கிள்ளான், தாமான் செந்தோசா, ஜாலான் டத்தோ யூசோப் ஷாபுடின் னில் நிகழ்ந்தது. லோரியின் தலைப்பகுதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கொண்தெனா வின் அடிப்பகுதியில் சிக்கிய புரோடுவா கன்சில் காரின் ஓட்டநரான அந்த ஆடவர், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்படை தலைவர் சுல்பிகர் ஜாஃபர் தெரிவித்தார்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த நபரின் உடலை மீட்பதற்கு மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


