சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பொருட்கள் ஏற்றப்பட்டுக்கொண்டு இருந்தகொண்தெனா டிரைய்லரில், கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் கிள்ளான், தாமான் செந்தோசா, ஜாலான் டத்தோ யூசோப் ஷாபுடின் னில் நிகழ்ந்தது. லோரியின் தலைப்பகுதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கொண்தெனா வின் அடிப்பகுதியில் சிக்கிய புரோடுவா கன்சில் காரின் ஓட்டநரான அந்த ஆடவர், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்படை தலைவர் சுல்பிகர் ஜாஃபர் தெரிவித்தார்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த நபரின் உடலை மீட்பதற்கு மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


